இந்தியா

இதுவரை ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் வாபஸ்!

DIN


தில்லி: இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, வங்கிக் கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி, சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், ஜூன் 30 வரை ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி:

“மே 19-ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் ரூ. 3.56 லட்சம் கோடி 2,000 நோட்டுகள் இருந்த நிலையில், ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மொத்த நோட்டுகளில் இது 76 சதவிகிதமாகும்.

வங்கிகளின் தகவலின்படி, 87 சதவிகித நோட்டுகள் வங்கிக் கணக்குகள் டெபாசிட்டும், 13 சதவிகித நோட்டுகள் வேறு மதிப்பிலான நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க அடுத்த 3 மாத காலகட்டத்தை பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT