பாஜக பிரமுகரின் செயலால் மனித குலத்துக்கே அவமானம்: ராகுல் காந்தி கண்டனம்
மத்திய பிரதேசத்தில் பழங்குடியை சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பழங்குடியை சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்ற நபா் சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.
இதனைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், பாஜக ஆட்சியில் பழங்குடி சகோதர, சகோதரிகள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மத்தியப் பிரதேசத்தின் பாஜக நிர்வாகியின் மனிதாபிமான மற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானத்தை சந்தித்துள்ளது.
பழங்குடியின மற்றும் தலித் சமூக மக்கள் மீதான பாஜகவின் உண்மையான முகமும், குணமும் இதுதான்.” என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.