இந்தியா

அமர்நாத்: 13 நாளில் 1.62 லட்சம் பேர் தரிசனம்!

DIN

அமர்நாத் யாத்திரையின் 13வது நாளில் 16,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலை தரிசனம் செய்துள்ளனர். 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய வருடாந்திர யாத்திரையில் இதுவரை சுமார் 1.62 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

7,245 பேர் அடங்கிய பயணிகளின் மற்றொரு குழு பகவதி நகர் யாத்திரி நிவாஸிலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். இதில் 3,144 பயணிகள் பால்டால் வழியாகவும், 4,101 பேர் பஹல்கம் பாதையிலும் சென்றனர். 

புனித யாத்திரை தொடங்கி இதுவரை, 19 பேர் இயற்கை காரணங்களுக்காக உயிரிழந்தனர். 

பஹல்கம், பால்டால் வழியாக குகைக் கோயிலை அடைய 3 முதல் 4 நாள்கள் ஆகும். இரண்டு வழிகளிலும் ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன. 

குகைக் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் 62 நாள் அமர்நாத் யாத்திரை பயணம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமா திருவிழாவுடன் நிறைவடைகிறது. 

பயணிகளுக்கு வசதியாக அங்காங்கே மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆல்கஹால் மற்றும் புகையிலைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT