சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி
சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் சந்தியான் - 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதுக்கு வாழ்த்து தெரிவித்த பூடான் பிரதமருக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பில் ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது: சந்திராயன் - 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன் - 3 திட்டத்தினால் மனித குலம் சிறப்பான பயனை அடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டதாவது: உங்களது மகிழ்ச்சியான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில் சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
சந்திராயன் -3 நேற்று முன் தினம் (ஜூலை 14) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது.
இதுவரை நிலவை ஆராய்வதில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளே வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.