ஜம்மு-காஷ்மீரின் புட்காமில் தடைசெய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு கூட்டாளிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
புட்காம் மாவட்டத்தின் பீர்வா பகுதியில் நால்வரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கோந்திபோராவின் பீர்வாவில் வசிக்கும் சாஸ் முஷ்தக், செவ்தார பீர்வாவில் வசிக்கும் அஸ்ஹர் அகமத் மீர், அர்வா பீர்வாவில் வசிக்கும் இர்பான் அகமஷ் சோபி மற்றும் அர்வா பீர்வாவில் வசிக்கும் அப்ரார் அஹமத் மாலிக் ஆகியோர் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தனர்.
இதையும் படிக்க: வெளியானது கொலை டிரைலர்!
இதையடுத்து, பயங்கரவாதிகள் பயன்படுத்திய பொருள்களை போலீஸார் கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.