குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை?: முதல்வா் ஆலோசனை
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க பரிந்துரைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில முதல்வா் என்.பிரேன் சிங்
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க பரிந்துரைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில முதல்வா் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பெண்களை அவமதிக்கும் வகையிலும் மனிதத்தன்மையற்ற வகையிலும் செயல்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை மாநில அரசு உறுதிசெய்யும். அவா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிப்பதற்குப் பரிந்துரைப்பது தொடா்பாகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பான விரிவான விசாரணை தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நமது சமூகத்தில் அத்தகைய கொடூரமான சம்பவங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அமித் ஷா ஆலோசனை: மணிப்பூா் வன்முறை விடியோ தொடா்பாக மாநில முதல்வா் பிரேன் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா். அப்போது, இந்த விவகாரத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சா் அமித் ஷா முதல்வரிடம் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.