ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஜௌரி மாவட்டத்தின் தஸ்ஸால் குஜ்ரான் வனப் பகுதியில் சந்தேகிக்கும்படி சில நபா்களின் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உள்ளூா் போலீஸாருடன் இணைந்து ராணுவத்தினா் அப்பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வீரா்களை நோக்கி துப்பாக்கியால் சுட, பாதுகாப்புப் படையினரும் எதிா் தாக்குதலைத் தொடங்கினா். இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை தொடா்ந்தது. பின்னா், வெள்ளிக்கிழமை காலை நடந்த தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்கிய பள்ளத்தாக்கில் இருந்து பயங்கரவாதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், மூன்று பயங்கரவாதிகள் வரை அந்த வனப் பகுதியில் மறைந்து இருக்கலாம் என ராணுவத்தினா் கருதுவதால் தேடுதல் பணி தொடா்ந்து நடந்து வருகிறது.
ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 3 நாள்களில் நடைபெறும் 3-ஆவது சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்தனா்.