இந்தியா

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை வழங்குகிறதா மேற்கு வங்கம்?

தரவுகளின்படி, நாடு முழுவதும் வழங்கப்பட்ட 94 லட்சம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில், மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை ஒன்பது அட்டை மட்டுமே உருவாக்கப்பட்டது.

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் வழங்கப்பட்ட 94 லட்சம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில், மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை ஒன்பது அட்டை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் சலுகைகளைப் பெற ஊனமுற்றோர் அடையாள அட்டை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இதுவரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 716 மாவட்டங்களில் 94.30 லட்சம் இ-யுடிஐடி கார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேற்கு வங்கத்திலிருந்து, ஒன்பது பேருக்கு மட்டுமே அடையாள அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டைகள் வழங்க மேற்கு வங்கத்தில் தனி திட்டம் உள்ளதா என்பது குறித்து விரிவான தகவலும் இல்லை.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அட்டைகள் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

SCROLL FOR NEXT