இந்தியா

அகிலேஷ் யாதவுடன் நாளை கேஜரிவால் சந்திப்பு!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நாளை சந்திக்க உள்ளார். 

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நாளை சந்திக்க உள்ளார். 

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து  தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால் ஆதரவு கோரி வருகிறார்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை அகிலேஷ் யாதவை கேஜரிவால் சந்திக்க உள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி தெரிவித்துள்ளார். 

கேஜரிவாலுடன் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வருவதாக அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT