இந்தியா

திரிணமூல் காங்கிரஸ்: கட்சி அல்ல, தனியார் நிறுவனம் -சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், கட்சி அல்ல தனியார் நிறுவனம் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். 

DIN

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், கட்சி அல்ல தனியார் நிறுவனம் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிணமூல் காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல, தனியார் நிறுவனம். அதன் தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார். மேலாண்மை இயக்குநராக அபிஷேக் பானர்ஜி இருந்து வருகிறார். பேராசிரியர் சுகதா ராய் அதன் ஊழியர். 

ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று இன்று (ஜூன் 6) சந்தித்தார். அதனை விமர்சித்த சுவேந்து அதிகாரி,

புகைப்படம் எடுத்துக்கொள்ள மம்தா பானர்ஜி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.  மேற்கு வங்கத்தில் எந்த அடிப்படை மருத்துவ வசதியும் இல்லை.

ரயில் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தினரை கொல்கத்தாவிலுள்ள நேதாஜி உள் விளையாட்டு அரங்குக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி நீண்ட உரையாற்றி, அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் காசோலையை வழங்குவார். விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தினரை வரவழைப்பது அவமானகரமான செயல் என விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

SCROLL FOR NEXT