இந்தியா

திரிபுராவில் ஜூன் 17இல் பேரணி: ஜெ.பி.நட்டா பங்கேற்பு!

திரிபுராவின் சண்டிர்பசார் பகுதியில் ஜூன் 17-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்று மாநில தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். 

DIN

திரிபுராவின் சண்டிர்பசார் பகுதியில் ஜூன் 17-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்று மாநில தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். 

அடுத்த ஆண்டு மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான தொடக்கமாக இந்த பேரணி நிகழ்த்தப்படுகிறது. 

இதற்காக ஜூன் 16-ஆம் தேதி நட்டா திரிபுராவிற்கு வருகிறார். மேலும் அவர் முதல்வர் மானிக் சாஹா உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களை சந்திப்பார். 

நட்டாவின் வருகையையொட்டி முதல்வர், மாநில தலைவர் பட்டாச்சார்ஜி, அமைச்சர்கள் மற்றும் மூத்த கட்சித் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT