இந்தியா

லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை?

பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் மனைவியுமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் மனைவியுமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மொத்தம் 16 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பிகாரில் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, வேலைக்காக அணுகியவா்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு, அவா்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரொக்கப்பணமாக கொடுத்தும் லாலுவின் குடும்பத்தினர் நிலங்களை வாங்கியுள்ளனர். 

இந்நிலையில், லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்களின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

சமீபத்திய தகவலின்படி, ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கில் சில விவரங்களை திரட்டும் பொருட்டு ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

SCROLL FOR NEXT