முகப்பு
இந்தியா

சிம்லாவில் சூறைக் காற்றுடன் பலத்த மழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிம்லா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
கோப்புப் படம்
பகிர்:

சிம்லா: சிம்லா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிம்லா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (செவ்வாய்க் கிழமை) பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், பனிமூட்டத்துடன் கூடிய கடுமையான புயல் வீசியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலையில் தெளிவான நாளாக இருந்த போதிலும் நேரம் செல்லச் செல்ல வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த புயல் நீடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஷோப்ரா, சிம்லா மற்றும் குஃப்ரியில் முறையே 5 மி.மீ, 2 மி.மீ மற்றும் 1 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.