இந்தியா

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 தொற்று: சுகாதாரத்துறை செயலர் கடிதம்

DIN

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று  அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சில மாநிலங்களில் கரோனா தொற்று கணிசமாக அதிகரிப்பதை கவனிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாநில அரசுக்கு ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவையற்ற விவாதம்!-"கோவிஷீல்டு' தடுப்பூசி பற்றிய தலையங்கம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பூ வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

SCROLL FOR NEXT