முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் 13,000 மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

கிராமப்புறங்களில் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும் அதிகாரிகளின் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Updated On : 3 மே 2023, 10:18 pm IST
பகிர்:

போபால்: கிராமப்புறங்களில் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும், அதிகாரிகளின் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச ஸ்வஷாசி சிகித்சக் மகாசங்கத்தின் குடை அமைப்பின் கீழ் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 13,000 மருத்துவர்கள் பங்கேற்கின்றனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதமும் இதேபோன்ற போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் வெளிநோயாளிகள் சேவைகள் மற்றும் பிற அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கோட்ட ஆணையர்களுடன் வேலைநிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாநிலத்தில் மருத்துவ வசதிகள் சீராக செயல்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments