இந்தியா

தில்லி பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி

DIN

தில்லிப் பல்கலைக் கழகத்தில்  விடுதியில் தங்கியுள்ள முதுநிலை மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார்.

வெள்ளை டி-சர்ட் அணிந்து மாணவர்களுடன் அவர் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்களது கல்வியில் அடுத்து என்ன செய்யலாம் என திட்டம் வைத்துள்ளார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த மாதம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடையேயும், ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையேயும் முகர்ஜி நகர் பகுதியில் ராகுல் காந்தி பேசியிருந்தார். 

முகர்ஜி நகர் பகுதியில் சாலையோரத்தில் நாற்காலியில் அமர்ந்து மாணவர்களிடம் ராகுல் காந்தி, அவர்களது அனுபவம் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT