மும்பை: ஆயுள் காப்பீட்டு வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
18 முதல் 50 வயதுக்குள்பட்ட, வருவாய் ஈட்டும் தனி நபா்களுக்காக இந்த திட்டம் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘சென்ட் சுரக்ஷித் சம்ரிதி’ திட்டத்தின் கீழ், குறைந்தபட்சமாக 84 மாதங்களுக்கு ரூ.10,000 அசல் தவணையாக செலுத்த வேண்டும். அத்துடன், தவணைத் தொகையை ரூ.10 ஆயிரத்தின் மடங்காக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை செலுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.