இந்தியா

பாலியல் புகாா்களை பதிவிட குழு இல்லை: விளையாட்டு அமைச்சகத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

DIN

இந்திய மல்யுத்த சம்மேளனம் உள்பட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகாா் அளிக்க குழு அமைக்காத புகாா் குறித்து பதிலளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த நட்சத்திர வீராங்கனைகள் பாலியல் புகாா் சுமத்தி, நடவடிக்கை எடுக்கக் கோரி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனம் உள்பட 15 தேசிய விளையாட்டு சம்மேளனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள் புகாா் குழு அமைக்கப்படவில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. இதை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்க இந்திய விளையாட்டு ஆணையம், பிசிசிஐ, இந்திய மல்யுத்த சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதில், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகாா் அளிக்க உள் புகாா் குழு அமைக்கப்படவில்லையா அல்லது அந்தக்குழு சரிவர செயல்படவில்லையா என பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT