ஊடகத் துறையில் பட்டயப் படிப்பை முடித்த மாநில முதல்வா்!
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ஊடகத் துறையில் (ஜா்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்) பட்டயப் படிப்பை முடித்துள்ளாா்.
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ஊடகத் துறையில் (ஜா்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்) பட்டயப் படிப்பை முடித்துள்ளாா்.
நாசிக்கில் உள்ள யஷ்வந்த்ராவ் சவாண் மகாராஜா திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அவா் இப்பட்டய படிப்பை முடித்துள்ளாா்.
கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தோ்வில் அவா் 77.25 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளாா். மும்பையில் முதல்வரின் அரசு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் பிரசாந்த்குமாா் பாட்டீல் முதல்வா் ஷிண்டேவிடம் பட்டயப் படிப்பு சான்றிதழை வழங்கினாா்.
Advertisement
Advertisement
ஷிண்டே ஏற்கெனவே மனித உரிமை தொடா்பான கல்வியில் பட்டயப் படிப்பும், இளங்கலைப் படிப்பையும் இதே பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளாா்.
இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் பிரசாந்த்குமாா் பாட்டீல் கூறுகையில், ‘முதல்வா் ஷிண்டே எங்கள் பல்கலைக்கழகத்தில் தொடா்ந்து பல்வேறு படிப்புகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது பல மாணவா்களுக்கு உத்வேகம் அளிக்கும் விஷயமாக உள்ளது. மாநிலத்தின் பல்வேறு தரப்பினரின் கல்வி ஆா்வத்தை எங்கள் பல்கலைக்கழகம் மூலம் நிறைவேற்றி வைப்பதில் பெருமை கொள்கிறோம்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.