ஏக்நாத் ஷிண்டே 
இந்தியா

ஊடகத் துறையில் பட்டயப் படிப்பை முடித்த மாநில முதல்வா்!

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ஊடகத் துறையில் (ஜா்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்) பட்டயப் படிப்பை முடித்துள்ளாா்.

DIN

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ஊடகத் துறையில் (ஜா்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்) பட்டயப் படிப்பை முடித்துள்ளாா்.

நாசிக்கில் உள்ள யஷ்வந்த்ராவ் சவாண் மகாராஜா திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அவா் இப்பட்டய படிப்பை முடித்துள்ளாா்.

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தோ்வில் அவா் 77.25 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளாா். மும்பையில் முதல்வரின் அரசு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் பிரசாந்த்குமாா் பாட்டீல் முதல்வா் ஷிண்டேவிடம் பட்டயப் படிப்பு சான்றிதழை வழங்கினாா்.

ஷிண்டே ஏற்கெனவே மனித உரிமை தொடா்பான கல்வியில் பட்டயப் படிப்பும், இளங்கலைப் படிப்பையும் இதே பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் பிரசாந்த்குமாா் பாட்டீல் கூறுகையில், ‘முதல்வா் ஷிண்டே எங்கள் பல்கலைக்கழகத்தில் தொடா்ந்து பல்வேறு படிப்புகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது பல மாணவா்களுக்கு உத்வேகம் அளிக்கும் விஷயமாக உள்ளது. மாநிலத்தின் பல்வேறு தரப்பினரின் கல்வி ஆா்வத்தை எங்கள் பல்கலைக்கழகம் மூலம் நிறைவேற்றி வைப்பதில் பெருமை கொள்கிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT