கோப்புப் படம். 
இந்தியா

ஜெய்ப்பூர்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். 

DIN

ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள போஜ்புரா கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் அக்ஷித் இன்று காலை 7 மணியளவில் எதிர்பாராத வகையில் விழந்துள்ளான்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அக்ஷித்தை இரும்பு வலையின் உதவியுடன் வெளியே எடுத்தனர்.

பின்னர் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிறுவனின் உடல்நிலை ஆபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் போஜ்புரா கிராமத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT