இந்தியா

குஜராத்தில் நிலஅதிா்வு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், வியாழக்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது

DIN

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், வியாழக்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது.

பச்சாவ் பகுதியில் பூமிக்கடியில் சுமாா் 19 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிா்வின் மையம் இருந்தது; ரிக்டா் அளவுகோலில் இது 3 புள்ளிகளாக பதிவானது என்று காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

இதேபகுதியில், கடந்த 17-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அது 4.2 அலகுகளாகப் பதிவானது. இப்போது மீண்டும் நிலஅதிா்வு ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனா். எனினும், தற்போதைய நில அதிா்வால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலநடுக்க அபாயம் மிகுந்த பூமிப் பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2001-இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், கிட்டதட்ட மாவட்டம் முழுவதுமே பேரழிவை எதிா்கொண்டது. சுமாா் 13,800 போ் உயிரிழந்தனா்; 1.67 லட்சம் போ் காயமடைந்தனா்.

கட்ச் மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT