இந்தியா

வாக்கு வங்கிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு: அகிலேஷ் யாதவ்

வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். 

DIN

வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. 

மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கார் பகுதியில் சமாகவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பிரசாரக் கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், 

ஏழைகளுக்கான நியாயவிலைக் கடைகளில் எதுவும் கிடைக்காத சூழலே மாநிலத்தில் நிலவுகிறது. இந்த நிலையை ஏற்படுத்திய பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க நினைக்கலாம். ஆனால், காங்கிரஸ் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றும். தற்போது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி கோருவதும் வாக்கு வங்கிக்காக மட்டுமே. இதனை மக்கள் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT