இந்தியா

மகாராஷ்டிரம்: தாணேயில் பருத்தி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலி

DIN

தானே: மகாராஷ்டிரம் மாநிலம், தாணேயில் உள்ள பருத்திக் கிடங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: 

தாணேவின் பிவாண்டி பகுதியில் உள்ள பருத்திக் கிடங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீ விபத்தில் ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பல்வேறு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றர். இந்த தி வீபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 

தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

விபத்து குறித்து தாணே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT