இந்தியா

மேற்கு வங்கம்: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

DIN

மேற்குவங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் உள்ள குஸுரி நஸ்கர் பாரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் குடோனில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. மேலும் இதனால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் எந்தவித தகவலும் வெளிவரவில்லை.

இதே மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில்  உள்ள ஒரு சணல் தொழிற்சாலையில் நேற்று (திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாடுகள் திருட்டு: மூவா் கைது

கனியாமூா் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு

இ.எஸ். லாா்ட்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தனியாா் பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பிளஸ் 1 தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 89.41% தோ்ச்சி

SCROLL FOR NEXT