FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மேற்கு வங்க மாநிலத்தின் நஸ்கர் பாரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று (நவ.21) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 21 நவம்பர் 2023, 11:43 am IST
பகிர்:

மேற்குவங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் உள்ள குஸுரி நஸ்கர் பாரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் குடோனில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. மேலும் இதனால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் எந்தவித தகவலும் வெளிவரவில்லை.

Advertisement

Advertisement

இதே மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில்  உள்ள ஒரு சணல் தொழிற்சாலையில் நேற்று (திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments