இந்தியா

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தில்லி  கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

சிசோடியா, ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கிய வேண்டிய வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை இன்னும் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்!

85 விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT