இந்தியா

கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர் மீது வழக்கு!

மகாராஷ்டிரத்தில் இந்திய நுழைவாயில் அருகேவுள்ள கடலில் குப்பையைக் கொட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

DIN

மகாராஷ்டிரத்தில் இந்திய நுழைவாயில் அருகேவுள்ள கடலில் குப்பையைக் கொட்டிய நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் ஆக்கப்பூர்வமாக இயங்கக்கூடியவர். அவர் இன்று பகிர்ந்திருந்த விடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர். 

அதில், இளைஞர் ஒருவர் காரில் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த குப்பைகளை இந்தியா கேட் அருகே கடலிக் கொட்டுவதைப் போன்று பதிவாகியிருந்தது. இதனை அப்பகுதியிலிருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். 

இந்த விடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இதைப் பார்க்கவே வருத்தமாக உள்ளது. குடிமக்களின் இத்தகையத மனநிலை மாறவில்லையெனில், நகரத்தின் உள்கட்டமைப்பு எந்தவிதத்திலும் மாறப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, குப்பைகளைக் கொட்டிய நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT