கோப்புப் படம். 
இந்தியா

மும்பை: சிறுவன் கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் கண்டுபிடித்த லியோ என்கிற மோப்ப நாய்

மும்பையில் சிறுவன் கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் காவல்துறையின் மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது. 

DIN

மும்பையில் சிறுவன் கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் காவல்துறையின் மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம், அந்தேரி (கிழக்கு) புறநகர் பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நள்ளிரவுக்குப் பிறகு சிறுவனின் குடும்பத்தினர் போவாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

அப்போது, வெளியே செல்வதற்கு முன் சிறுவன் தனது உடையை மாற்றிவிட்டதாக குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கின்றனர். உடனே காவல்துறையினர், லியோ என்ற டாபர்மேன் வகை மோப்ப நாயை அழைத்து வந்து அந்த சிறுவனின் சட்டையை மோப்பம் பிடிக்க வைத்துள்ளனர்.

சட்டையை மோப்பம் பிடித்த அந்த நாய், கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் அசோக் நகர் சேரியில் உள்ள தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறுவனைக் கண்டுபிடித்தது. கடத்தல்காரகள், காவல்துறையினருக்கு பயந்து சிறுவனை விட்டு சென்றதாக அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT