காஸா மருத்துவமனையில் சிகிச்சைக்கு இடமின்றி தவிக்கும் பொதுமக்கள் 
இந்தியா

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸ் உடன் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

DIN

பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸ் உடன் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

பாலஸ்தீனத்துக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யவும் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸ் உடன் பேசினேன். காஸா அல் - அலி மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்காக இரங்கல் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புகிறோம் என உறுதியளித்தேன். காஸா எல்லையில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டேன். இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினேன் எனப் பதிவிட்டுள்ளார். 

காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT