இந்தியா

உ.பி., அரசுப் பள்ளியில் மாணவர்கள் தொழுகை: முதல்வர் இடைநீக்கம்

உ.பி., அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவர்களை தொழுகை நடத்த அனுமதித்ததற்காக அப்பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

DIN

உ.பி., அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவர்களை தொழுகை நடத்த அனுமதித்ததற்காக அப்பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முதல்வர் மீரா யாதவ். இவர், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிலரை வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. 

பள்ளி வளாகத்தில் தொழுகை நடத்துவது துறை ரீதியான வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என மாவட்ட அளவிலான கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் பள்ளி வளாகத்தில் சில குழந்தைகள் தொழுகை நடத்தியது உறுதி செய்யப்பட்டது. 

விசாரணை அதிகாரியின் அறிக்கையைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் மீரா யாதவை இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் மற்ற ஆசியர்களான தெஹ்சீப் பாத்திமா மற்றும் மம்தா மிஸ்ரா ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்! 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது!

வழுக்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம்! - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா்

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT