ஜெயா வர்மா சின்ஹா 
இந்தியா

ரயில்வே வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்!

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா இன்று (செப். 1) பொறுப்பேற்றுக்கொண்டார்.

DIN


ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா இன்று (செப். 1) பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் ரயில்வே வாரியத்துக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையை ஜெயா வர்மா பெற்றார்.

ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவை வாரியத்தின் தலைமை பொறுப்புக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (செப்.1) ஜெயா வர்மா, ரயில்வே வாரியத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார். 

இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணியில், 1988ஆம் ஆண்டு சேர்ந்த ஜெயா வர்மா, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு ரயில்வே மண்டலங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீடாமங்கலத்தில் நாளை நலவாரிய தொழிலாளா்களுக்கான மருத்துவ முகாம்

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சாலையின் குறுக்கே நாய் வந்ததால்: இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த 4 போ் காயம்

SCROLL FOR NEXT