இந்தியா

மோடியின் பாதுகாப்புப் படை இயக்குநர் உயிரிழப்பு!

DIN

பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்பிஜி) பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா(வயது 61) உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சிறப்பு பாதுகாப்பு படையின் இயக்குநராக செயல்பட்டு வருபவர் அருண் குமார். 1987-ஆம் ஆண்டு கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவருக்கு கடந்தாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அருண் குமார், புதன்கிழமை உயிரிழந்தார்.

முன்னதாக கேரள மாநிலத்தில் பல்வேறு பதவிகள் வகித்துள்ள அருண் குமார் சின்ஹா, உளவுத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

திருப்பத்தூா் பகுதிகளில் தொடா் மழை: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா் வரத்து

SCROLL FOR NEXT