முகப்பு
இந்தியா

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த அரிசி விலை!

சர்வதேச சந்தையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

சர்வதேச சந்தையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலையேற்றம் பரவலாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

ஏற்றுமதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விநியோக சங்கிலியில் தேக்கத்தை ஏற்படுத்தியதே விலையேற்றத்துக்கு வித்திட்டுள்ளது. 

கரோனா பெருந்தொற்று, உக்ரைன் - ரஷியா இடையிலான் போர் ஆகியவையும் அரிசி விலையேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

உள்ளூர் சந்தைகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய உணவுத் துறை கட்டுப்பாடு விதித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.