இந்தியா

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த அரிசி விலை!

சர்வதேச சந்தையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்துள்ளது. 

DIN

சர்வதேச சந்தையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலையேற்றம் பரவலாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

ஏற்றுமதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விநியோக சங்கிலியில் தேக்கத்தை ஏற்படுத்தியதே விலையேற்றத்துக்கு வித்திட்டுள்ளது. 

கரோனா பெருந்தொற்று, உக்ரைன் - ரஷியா இடையிலான் போர் ஆகியவையும் அரிசி விலையேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

உள்ளூர் சந்தைகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய உணவுத் துறை கட்டுப்பாடு விதித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT