இந்தியா

கூகுளுக்கு வயது 25: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது!

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை( G25gle) டூடுல் வெளியிட்டுள்ளது. 

DIN

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை( G25gle) டூடுல் வெளியிட்டுள்ளது. 

தேடுதல் ஜாம்பவானான கூகுள் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நமது தேவையோ அறிந்து நமக்கு உரியத் தகவலை அளிக்கும் கூகுள் கடவுள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

தினசரி பயன்பாட்டில் கூகுளுக்கு முக்கியப்பங்கு உண்டு. எதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினாலும், அதற்கு முதல் நுழைவாயிலாக இருப்பது இந்த தேடுபொறி தளம் தான். அவ்வளவு பிரசித்தமான கூகுள் தனது 25-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. 

சரி, அப்படிப்பட்ட கூகுளை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகிய இருவரால் கடந்த 1998-ல் இதேநாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

உலகம் முழுவதும் சுமார் 500 கோடி பயனாளர்களைப் பெற்றிருக்கும் கூகுள், தன்னை ஒவ்வொரு வருடமும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. 

சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள கூகுள் வரைபடம் மூலம் உலகிற்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக எங்களுடன் பயணித்ததற்காகப் பயனர்களுக்கு நன்றி. எதிர்காலம் நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூகுள் டூடுல் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT