ஆந்திர மாநில வனப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து தண்ணீர் வரும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், கிந்துகுரு வனப் பகுதியில் பாபிகொண்டலு தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்கு் லாரல் என அழைக்கப்படும் மரத்தின் மரப் பட்டையை வன அதிகாரி ஒருவர் அரிவாளால் வெட்டினார். அப்போது மரத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்தது.
மரத்தில் இருந்து சுமார் 20 லிட்டர் தண்ணீர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மரத்திற்கு இயற்கையாகவே தண்ணீரை தனக்குள் சேமித்து வைக்கும் அமைப்பு இருப்பதைக் கண்டு வன அதிகாரிகள் ஆச்சர்மடைந்தனர்.
இருப்பினும் இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த மரம் இந்தியா, நேபாளம், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.