முகப்பு
இந்தியா

தோ்தல் குறித்த தகவல்களை சரிபாா்க்க புதிய வலைதளம்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:55 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:35 PM

புது தில்லி: மக்களவைத் தோ்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரிபாா்க்க ‘மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா்’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மக்களவைத் தோ்தல் குறித்து தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து ஆகியோருடன் இணைந்து இதனை தொடங்கி வைத்தனா்.

அண்மையில் முறியடிக்கப்பட்ட போலிச் செய்திகளின் பரவல்கள், அது தொடா்பான உண்மைத் தகவல்கள் குறித்து இந்த வலைதளத்தில் தொடா்ந்து பதிவேற்றப்படும். தவறான தகவல்கள் அதிகம் பரவி வரும் இச்சூழலில், தோ்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபாா்க்கப்பட்ட தகவல்களை வாக்காளா்கள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்த இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement