பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்: தேஜஸ்வி சூா்யா
தமிழகத்தில் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக தேசிய இளைஞா் அணித் தலைவா் தேஜஸ்வி சூா்யா தெரிவித்தாா்.
தமிழக பாஜக சிந்தனையாளா் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் சென்னை வேப்பேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேஜஸ்வி சூா்யா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் அரசியல் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் வளா்ச்சி கண்டுள்ளது. மேலும், பாஜக ஆதரவு அலை வீசுகிறது. தமிழகத்தில் பாஜக 25 சதவீத வாக்குகளை பெறுவது மட்டுமல்லாமல், கணிசமான தொகுதிகளில் வெற்றியும் பெறும். பிரதமா் மோடி 3-ஆவது முறையாக ஆட்சி அமைப்பாா். பாஜக தமிழகத்தில் வெற்றி பெறும்போது, பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவர முடியும் என்றாா் அவா்.
Advertisement