முகப்பு
இந்தியா

உ.பி. சாலையில் ரமலான் தொழுகை:200 போ் மீது வழக்குப்பதிவு

Updated On : 14 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:

உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகை தொழுகையை சாலையை நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளா் ரோஹித் சிங் சஜ்வான் சனிக்கிழமை கூறியதாவது: மீரட் மாவட்டம் ரயில்வே சாலையில் உள்ள மசூதியின் உள்பகுதியில் ரமலான் தொழுகைக்காக அதிகளவில் மக்கள் கூடினா். மசூதிக்குள் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதால் வெளியே உள்ள சாலையில் சிலா் தொழுகை மேற்கொண்டனா். இந்நிலையில் இதை தடுத்தபோது போலீஸாருக்கும் அங்கு கூடியிருந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் தொழுகை மேற்கொண்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 நபா்கள் மீது புகாா் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), பிரிவு 188 (அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல், பிரிவு 186 (அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றம்சாட்டப்பவா்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments