வயநாடு: புதுமலையில் 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்!
வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் 8-வது நாளை எட்டியுள்ளன...
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 387-ஐ கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்காக 64 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள அங்கு திங்கள்கிழமையன்று(ஆக. 5) 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.