கோப்புப் படம். 
இந்தியா

கேதார்நாத் நிலச்சரிவு: மேலும் 3 சடலங்கள் மீட்பு

கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

DIN

கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் மலையேற்றப் பாதையில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது சிலர் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியான லிஞ்சோலியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வியாழன் பிற்பகல் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

சடலங்கள் அருகே கிடைத்த ஆதார் மற்றும் ஏடிஎம் கார்டுகளின் அடிப்படையில் அவர்கள் சுமித் சுக்லா, கிருஷ்ணா படேல் மற்றும் லால் பகதூர் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுக்லா (21) காஜியாபாத்தில் வசிப்பவர், மற்ற இருவரின் வீடு தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே லிஞ்சோலியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT