கேதார்நாத் நிலச்சரிவு: மேலும் 3 சடலங்கள் மீட்பு
கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் மலையேற்றப் பாதையில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது சிலர் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியான லிஞ்சோலியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வியாழன் பிற்பகல் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
சடலங்கள் அருகே கிடைத்த ஆதார் மற்றும் ஏடிஎம் கார்டுகளின் அடிப்படையில் அவர்கள் சுமித் சுக்லா, கிருஷ்ணா படேல் மற்றும் லால் பகதூர் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுக்லா (21) காஜியாபாத்தில் வசிப்பவர், மற்ற இருவரின் வீடு தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே லிஞ்சோலியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.