முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் பகுதியில் விழுந்த இந்திய ‘ட்ரோன்’

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

Updated On : 24 ஆகஸ்ட் 2024, 2:33 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் கண்காணிப்பு, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயிற்சி நோக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.25 மணியளவில் ட்ரோன் பறக்கவிடப்பட்டது. பீம்பா் கலி செக்டாரில் இருந்து பறந்த அந்த ட்ரோன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது.

Advertisement

Advertisement

அதனை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது அந்நாட்டு ஊடக செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பை தொடா்புகொண்ட இந்திய ராணுவம், அந்த ட்ரோனை திருப்பி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது என்று தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments