ஏ.ஜி. நூரனி  படம்: ANI
இந்தியா

ஏ.ஜி. நூரனி காலமானார்!

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார்.

DIN

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார்.

இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட அரசியல் வல்லுநர், சிறந்த வழக்குரைஞர் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக வலம் வந்தவர் அப்துல் கஃபூர் நூரனி. நண்பர்களால் நூரனி அல்லது கஃபூர் பாய் என அறியப்பட்டவர்.

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், அந்த புத்தக வேலைகள் முடிவடையும் முன்னரே உயிரிழந்துள்ளார்.

நடமாடும் அறிவுக்களஞ்சியம் எனவும் ஏ.ஜி. நூரனியை பலரும் புகழ்வது வழக்கம். பல்வேறு தலைப்பின் கீழ் நூரனி புத்தகங்களை எழுதியுள்ளார். காஷ்மீர் விவகாரம், இந்தியா - சீனா விவகாரம், ஹைதராபாத், அடிப்படை உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்களை எழுதியுள்ளார்.

மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான ஏ.ஜி.நூரனியின் இழப்பு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பன்முகத் திறன் கொண்டவரான ஏ.ஜி. நூரனியின் வயது 94.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT