லாரன்ஸ் பிஷ்னோய் 
இந்தியா

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் ரூ. 10 கோடி கேட்டு மிரட்டல்!

உ.பி.யில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எனக்கூறி ஒருவரிடம் ரூ. 10 கோடி பணம் பறிக்க முயன்றவர்கள் மீது வழக்குப்பதிவு.

DIN

உ.பி.யில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எனக்கூறி ஒருவரிடம் ரூ. 10 கோடி பணம் பறிக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பள்ளியா மாவட்டத்தில் உள்ள பெல்தாரா ரோடு பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தினேஷ் குமார் குப்தா. இவருக்கு இரு நாள்களுக்கு முன்னர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயரில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் பிஷ்னோய் கும்பல் எனக் குறிப்பிட்டு ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறையில் தினேஷ் குமார் குப்தா புகாரளித்தார். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த காவல்துறையினர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரைச் சொல்லி ஏமாற்றி மிரட்டி பணம் பறிக்க யாரேனும் இந்தக் கடிதத்தை அனுப்பினார்களா என்று விசாரித்து வருகின்றனர்.

தினேஷ் குமார் குப்தாவின் மனைவி ரேனு குப்தா தற்போது பெல்தாரா ரோடு பகுதியின் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அவரை நிர்வாக ரீதியாக மிரட்டும் விதமாக இந்தக் கடிதம் அனுப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்கு செல்லவே தேவையில்லை: அணி உரிமையாளர்

SCROLL FOR NEXT