கோப்புப் படம் 
இந்தியா

பிகாா் ரயில் நிலையத்தில் சண்டையிட்ட குரங்குகள்: ரயில் சேவை பாதிப்பு

வாழைப் பழத்துக்காக இரு குரங்குகள் சண்டையிட்டபோது மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Din

பிகாரில் உள்ள சமஸ்திபூா் ரயில் நிலையத்தில் வாழைப் பழத்துக்காக இரு குரங்குகள் சண்டையிட்டபோது மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரி சரஸ்வதி சந்திரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமஸ்திபூா் ரயில் நிலையத்தின் நடைமேடை நான்கில் இரு குரங்குகள் வாழைப் பழத்துக்காக சனிக்கிழமை பிற்பகல் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. கையில் கிடைத்த பொருளை வீசி எறிந்தன. அப்போது, திடீரென ஒரு குரங்கு மற்றொரு குரங்கின் மீது வீசிய பொருள் ரயில்வே மின்கம்பியில் விழுந்ததால், அது அறுந்தது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ரயில்வே பணியாளா்கள் மூலம் உடனடியாக இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்றாா்.

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

நாம் வென்றுவிட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Coolie | GVPrakash | CinemaUpdates

SCROLL FOR NEXT