இந்தியா

ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயம்: இந்திய தூதரகம்

ஜொ்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்ததாகவும் அவா்களுடன் தொடா்பில் உள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்தது.

DIN

புது தில்லி: ஜொ்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்ததாகவும் அவா்களுடன் தொடா்பில் உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘ ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தையில் காரை வேகமாக ஓட்டி வந்த சவூதி அரேபியாவைச் சோ்ந்த மருத்துவா் நடத்திய தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று போ் வீடு திரும்பினா். மீதமுள்ளவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். காயமடைந்த இந்தியா்களுக்கு தேவையான உதவிகளை தூதரகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்குள் வேகமாக காா் ஓட்டி வந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதினாா். இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்; சுமாா் 200 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT