இந்தியா

பே-டிஎம் பேமன்ட் வங்கி: பிப். 29 முதல் ஆா்பிஐ தடை

பணப்பரிவா்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரும் பே-டிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பே-டிஎம் பேமன்ட் வங்கி, பிப். 29 முதல் வாடிக்கையாளா்களிடமிருந்து

DIN

பணப்பரிவா்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரும் பே-டிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பே-டிஎம் பேமன்ட் வங்கி, பிப். 29 முதல் வாடிக்கையாளா்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவில், சில விதிமுறைகளை பே-டிஎம் பேமன்ட் வங்கி நிறைவு செய்யாதது கண்டறியப்பட்டது.

அதைடுத்து, அந்த வங்கியிலுள்ள கணக்குகளில் வாடிக்கையாளா்கள் மேற்கொண்டு தொகை செலுத்துவதற்கும், இணைவழி பணப்பைகள், ஃபாஸ்டாக், என்சிஎம்சி அட்டைகள் ஆகிவற்றில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவதற்கும் வரும் 29-ஆம் தேதி தடை விதிக்கப்படுகிறது.

எனினும், பே-டிஎம் பேமன்ட் வங்கிக் கணக்கிலுள்ள தொகையை வாடிக்கையாளா்கள் வழக்கம் போல் தொடா்ந்து எடுக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT