இந்தியா

‘புஷ்பா’ படப் பாணியில் காவலர்கள்- கடத்தல்காரர்கள் மோதல்: 50 பேர் மீது வழக்குப் பதிவு

DIN

வனத்துறை காவலர்கள் குழுவுக்கும் தேக்கு மரக் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த மோதல் உருவானது. 50 பேர் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒன்பது இருசக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்டன. 

கொலுவா பத்தர் பகுதியில் சோதனையிட சென்ற வனத்துறை அதிகாரிகளைத்  தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த 50 பேர் தாக்கியதாகவும் மோதலுக்கு பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் விட்டு சென்ற 9 இருசக்கர வாகனங்கள் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 32 தேக்கு மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

பாஜக ஆா்ப்பாட்டம்: 103 போ் மீது வழக்குப் பதிவு

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT