இந்தியா

3 ஐஐடி, எய்ம்ஸ்... ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 20) தொடங்கி வைத்தார்.

DIN

ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 20) தொடங்கி வைத்தார்.

ஐஐடி ஜம்மு, சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியில் ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களையும் தொடக்கி வைத்து அர்ப்பணித்தார்.

இதேபோன்று ஜம்மு காஷ்மீரில் சாலை, ரயில் இணைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

நலத்திட்ட உதவிகளைத் தொடக்கி வைக்கும் நரேந்திர மோடி

2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஜம்மு விமான நிலைய புதிய முனையக் கட்டடம், பெட்ரோலிய பொதுப்பயன்பாட்டுக் கிடங்கிற்கும் அடிக்கல் நாட்டினார். 1,500 பேருக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT