இந்தியா

பிரதமர் மோடி வழிபட்ட லேபாக்‏ஷி கோயிலின் சிறப்பம்சம்

பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய லேபாக்‏ஷி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

PTI

பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய லேபாக்‏ஷி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

லேபாக்‏ஷி கோயிலானது, ராமருடன் வனவாசத்தில் இருந்த சீதா தேவியை, ராவணன் கடத்திச் சென்றபோது ஜடாயு என்ற மாபெரும் கழுகு பின் தொடர்ந்து சென்ற தலம் லேபாக்‏ஷி என்று நம்பப்படுகிறது.

இறக்கும் நிலையில் இருந்த ஜடாயு, சீதா தேவி சிறைப்பிடிக்கப்பட்டதைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தெரிவித்ததால், லேபாக்‏ஷியில் ராமரால் தெய்வீக விடுதலையான 'மோட்சம்' அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறவிருக்கும் நிலையில், தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஆந்திரா மற்றும் கேரளம் செல்லும் பிரதமர் மோடி, ஆந்திரத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.  லேபாக்‏ஷி கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்கு சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அவர் கேரளம் சென்று குருவாயூர் உள்ளிட்ட கோயில்களுக்கும் செல்லவிருக்கிறார்.

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT