நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம் 
இந்தியா

நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

லக்னௌவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் 22 வயது மாணவி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். 

DIN

லக்னௌவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் 22 வயது மாணவி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். 

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவி ஸ்ருதி வர்மா. சீதாபூரைச் சேர்ந்த இவர் தனது நண்பர் சுபம் ராயுடன் சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் உள்ள செலிபிரிட்டி டெடோஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு எண் 903இல் வசித்து வந்தார். 

நண்பர்கள் இணைந்து திங்கள்கிழமை இரவு விருந்து நடத்தியுள்ளனர். அப்போது பால்கனியில் இருந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஸ்ருதி நிலைதடுமாறி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்தார். 

இந்த சம்பவம் நடைபெறும்போது அவரது குடும்பத்தினர் ஸ்ருதியின் நண்பரின் வீட்டில் இருந்துள்ளனர். இதையடுத்து ஸ்ருதியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் ஸ்ருதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

லக்னௌவில் தங்கி மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஸ்ருதி தயாராகி வந்தார். செவ்வாய்க்கிழமையன்று பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT