முகப்பு
இந்தியா

தில்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு!

தில்லியில் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

தில்லியில் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். 

இதையடுத்து, தில்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.  

இந்த விழாவில் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிடோர் பார்வையிட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →